பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி – நாளை நேர்முகத் தேர்வு

ராசிபுரம் அருகே, பட்டணம் பஞ்சாயத்தில் பெண்களுக்கான தையல் முதல் சந்தைப்படுத்தல் வரை முழுமையான இலவச தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது;

Update: 2025-05-14 08:40 GMT

பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி – நாளை நேர்முகத் தேர்வு

ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் டவுன் பஞ்சாயத்தில், மத்திய அரசின் தேசிய வள அமைப்பாக செயல்படும் அகமதாபாத் தலைமையகமுடைய இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பெண்கள் முன்னேற்றத்தைக் குறிவைத்து இலவச தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், 18 வயதுக்கு மேற்பட்டும் 45 வயதுக்குள் உள்ள பெண்களுக்கு தொழில் முனைவோர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒரு மாத கால பயிற்சியில், துணி மற்றும் சணல் பொருட்களில் தையல், லேப்டாப் பை, ஷாப்பிங் பேக், பர்ஸ், பைல் உள்ளிட்ட பல்வேறு உபயோகப் பொருட்கள் தயாரிப்பது பற்றி பயிற்சி அளிக்கப்படும். தொழில்துறையில் முன்னேற விரும்பும் பெண்களுக்கு தேவையான தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்தும் திறன்கள், திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானியத் திட்டங்கள் குறித்தும் விரிவான பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சி முடிவில், மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நாளை காலை 10:00 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள், 8825812528 அல்லது 9597491158 என்ற எண்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்யலாம். இந்த பயிற்சி, பெண்கள் தங்களுடைய வாழ்வில் நிதியாதார தன்னிறைவை பெறுவதற்கான முக்கியமான வாய்ப்பாக அமையும்.

Tags:    

Similar News