மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் ஆன்லைனில் பண்ண முடியுமா?

ஆன்லைனில் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பிக்க முடியுமா? என்பது பலரது சந்தேகம். அதனை தீர்க்கும் வகையில் கீழே விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.;

Update: 2023-08-02 07:56 GMT

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தை ஆன்லைனில் எப்படி பூர்த்தி செய்வது magalir urimai thogai apply online Tamil என்பதை பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர். அவர்களுக்கு உண்மையை தெளிவுபடுத்த இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்.

கடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் தனது தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகள் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது. தகுந்த குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 15 ம் தேதி முதல் தமிழகம் முழுக்க மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் அந்தந்த பகுதி நியாய விலை கடை ஊழியர்கள் மூலமாக வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பெற்றுக் கொண்ட இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து அந்த விண்ணப்பத்தை தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட முகாம் 24-07-2023 அன்று தொடங்கியது. அடுத்த முகாம் ஆகஸ்ட் 5ம் தேதி துவங்கும் என்று கூறப்படுகிறது.

Magalir urimai thogai apply online | ஆன்லைனில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிப்பது

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தை ஆன்லைனில் நிரப்பி விண்ணப்பிக்க முடியாது. இதனை அரசு அமர்த்தியுள்ள ஊழியர்கள் மட்டுமே செய்ய முடியும். அதனால்தான் அரசே நியாயவிலைக் கடை ஊழியர்கள் மூலம் விண்ணப்பத்தை விநியோகித்து, அதனை பொதுமக்களிடம் நிரப்பி வாங்கி, அந்த விவரங்களை அலுவலர்களே ஆன்லைனில் நிரப்பிவிடுவார்கள். அந்த தகவல் நியாய விலை கடை அட்டையுடன் பின்னர் சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தை எப்படி பூர்த்தி செய்வது | How to Fill Magalir Urimai Thogai Form

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தில் மொத்தம் 13 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றில் சில கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும். சில கேள்விகளுக்கு டிக் செய்ய வேண்டும்.

ஆதார் எண்

முதலாவதாக, விண்ணப்பதாரரின் 12 இலக்க ஆதார் எண்ணை நிரப்ப வேண்டும்.

பெயர்

பிறகு இரண்டாவதாக அதற்கு கீழே விண்ணப்பதாரரின் பெயரை எழுத வேண்டும். இங்கு விண்ணப்பதாரர் என்பவர் 21 வயது நிரம்பிய பெண் ஆவர். சில குடும்பங்களில் 21 வயது நிரம்பிய ஒன்றிற்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கலாம். அந்நிலையில் அவர்களுள் ஒரு நபரை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

குடும்ப அட்டை எண்

மூன்றாவதாக குடும்ப அட்டை எண் கேட்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் ஏற்கனவே விண்ணப்பம் வழங்கிய நபரால் நிரப்பப்பட்டிருக்கும். எனவே அதை நீங்கள் நிரப்ப தேவையில்லை.

திருமண நிலை

4 வது கேள்வியில் உங்கள் திருமண நிலை கேட்கப்பட்டிருக்கும். திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் தங்களுக்கு பொருத்தமான தெரிவை டிக் செய்யவேண்டும்

மொபைல் எண்

5 வது கேள்வியில் மொபைல் எண்ணை நிரப்ப வேண்டும். இதில் மொபைல் எண் என்பது விண்ணப்பதாரரின் ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை நிரப்புக.

சொந்த வீடா? வாடகை வீடா?

ஆறாவது கேள்வியில் நீங்கள் வசிப்பது சொந்த வீடா அல்லது வாடகை வீடா என்பதை டிக் செய்யவும்.

மாவட்டத்தின் பெயர்

பிறகு நீங்கள் வசிக்கும் மாவட்டத்தின் பெயரை குறிப்பிடவும்.

மின் இணைப்பு எண்

அடுத்து மின் இணைப்பு எண்ணை நிரப்ப வேண்டும். மின் இணைப்பானது விண்ணப்பதாரரின் பெயரில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவரது குடும்பத்தில் யாராவது ஒருவரது பெயரில் இருந்தால் போதுமானது ஆகும்.

மின் இணைப்பு எண்னை நிரப்பும்போது நீங்கள் கட்டணம் செலுத்திய இரசீதில் உள்ளவாறு நிரப்ப வேண்டும். ஏனெனில் மின் கட்டண அட்டையில் மாவட்ட குறியீட்டு எண் இருப்பதில்லை. எனவே ஏற்கனவே கட்டணம் செலுத்திய இரசீதில் இருப்பதை போன்று நிரப்ப வேண்டும்.

வங்கித் தகவல்கள்

7,8 மற்றும் 9 ஆவது கேள்விகளில் முறையே விண்ணப்பதாரரின் வங்கியின் பெயர், வங்கிக்கிளையின் பெயர் மற்றும் வங்கிக்கணக்கு எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும். இவை அனைத்தும் வங்கி பாஸ் புத்தகத்தில் இருக்கும்.

குடும்பத்தினர் விவரங்கள்

பத்தாவது கேள்வியில் 18 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது, தொழில், மாத வருமானம் மற்றும் வருமான வரி செலுத்துபவரா போன்றவற்றை குறிப்பிட வேண்டும். 18 வயதிற்கு குறைவாக உள்ள குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை சேர்க்க தேவையில்லை.

சொந்த வீடு

11 வது கேள்வியில் உங்களுக்கு சொந்த வீடு உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும். ஆம் எனில் அந்த வீட்டிற்கு அரசு திட்டத்தின் மூலம் நிதிஉதவி பெறப்பட்டதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

சொந்த நிலம்

12 வதில் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமாக நிலம் உள்ளதா என்பதை தெரிவு செய்து, ஆம் எனில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சேர்த்து 5 ஏக்கருக்கு மேல் நன்செய் அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.

சொந்தமாக வாகனம்

கடைசியாக குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது கார், ஜீப் ட்ராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.

கையொப்பம்

அடுத்து கொடுக்கப்பட்டுள்ள 11 உறுதிமொழிகளை ஒருமுறை படித்துவிட்டு விண்ணப்பதாரரின் கையொப்பத்தை இட வேண்டும். அவ்வளவு தான் தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பத்தை நிரப்பிவிட்டீர்கள்.

விண்ணப்பத்துடன் கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் | Magalir Urimai Thogai Form

Magalir Urimai Thogai Form யை Fill செய்த பிறகு டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் விண்ணப்பத்தை கொண்டு செல்ல வேண்டும். அதனுடன் கீழ்கண்ட அசல் ஆவணங்களை அதாவது ஒரிஜினல் ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும்.

  • ஆதார் அட்டை
  • குடும்ப அட்டை
  • வங்கி பாஸ் புத்தகம்
  • மின் இணைப்பு இரசீது

மேற்கண்ட அசல் ஆவணங்களை சரிபார்த்த பிறகு மீண்டும் விண்ணப்பதாரரிடமே வழங்கப்படும்.

Magalir urimai thogai scheme apply online ஆன்லைனில் இதனை அப்ளை செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டீர்களா? வீட்டுக்கு வரும் அரசு ஊழியர்களிடம் விண்ணப்பத்தை பெற்று சரியாக பூர்த்தி செய்து சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு இதனை பதிவு செய்தால் மட்டும் மகளிருக்கான உரிமைத் தொகை கிடைக்கும். 

Tags:    

Similar News