விழுப்புரத்தில் 25-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

விழுப்புரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25-ந் தேதி நடைபெறும் என கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்

Update: 2022-03-22 15:52 GMT

விழுப்புரம் கலெக்டர் மோகன்.

விழுப்புரம் கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  வருகிற 25-ந் தேதி காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

கூட்டத்தில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்கலாம் என தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News