கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்தபோது, மனைவியிடம் சிக்கிய போலீஸ் ஏட்டு, திக், திக் சம்பவம்

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்தபோது போலீஸ் ஏட்டு கையும், களவுமாக, மனைவியிடம் மாட்டினார், அடுத்து மனைவி செய்த பகீர் காரியம் ஏட்டுவை தலைக்குனிய வைத்தது.

Update: 2021-08-06 15:33 GMT

பைல் படம்

தெலங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் 6வது பட்டாலியனில் தலைமை காவலராக பணி யாற்றி வருபவர்ராஜேஷ். இவர் சுவப்னா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 7 மாதக் கைக் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பிறகு ராஜேஷ் தனது காதல் மனைவியி டம் அடிக்கடி தகராறு செய்து சண்டையிட்டு வந்துள்ளார்.

இதனால் மன வேதனை அடைந்த சுவப்னா காவல் நிலை யத்தில் புகார் அளித்தார், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் ராஜேசுக்கு பொல்லோரி கூடம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ராஜேஷ், அடிக்கடி தனது கள்ளக் காதலி வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார்.தனது வீட் டிற்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த சுவப்னா, இதுபற்றி கணவர் ராஜேஷிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் சரியாக பதிலளிக்கவில்லையாம். இதற்கிடையில் கணவரின் கள்ளத்தொடர்பை அறிந்த சுவப்னா, ராஜேஷை கண்டித்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் ராஜேஷ் தனது கள்ளக்காதலியுட னான தொடர்பை கைவிடவில்லை . இதேபோல் நேற்றும் ராஜேஷ் வீட்டுக்கு வராமல் தனது கள்ளக்காதலி வீட்டில் இருந்ததாக தெரிகிறது.

இதையறிந்து ஆத்திரமடைந்த சுவப்னா, தனது கணவரும் கள்ளக் காதலியும் இருக்கும் வீட் டிற்கு மகளிர் சங்கத்தை சேர்ந்த சில பெண்களுடன் சென்றார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்த தாக தெரிகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த சுவப்னா இருவரையும் கையும் களவுமாக சுற்றி வளைத்தார்.

பின்னர் தனது கணவர் ராஜேஷை சுவப்னா செருப்பால் சர மாரி தாக்கியுள்ளார். பின்னர் ராஜேஷை மகளிர்சங்கத்தினர் உதவியுடன் போலீசில் ஒப்படைத்து புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போலீஸ்காரரான தனது கணவரை மனைவி செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News