வேலூர் கோட்டையில் ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை

73 வது குடியரசு தினத்தையொட்டி வேலூர் கோட்டையில் தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஏற்றிவைத்தார்.

Update: 2022-01-26 12:40 GMT

73 வது குடியரசு தினத்தையொட்டி வேலூர் கோட்டையில் தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஏற்றி வைத்தார்.

73 வது குடியரசு தினத்தையொட்டி வேலூர் கோட்டையில் தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஏற்றி வைத்தார்.

பின்னர், வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பின்னர் சமூக நல்லிணக்க வலியுறுத்தும் வகையில் சமாதானப் புறாவை பறக்கவிட்ட ஆட்சியர் திறந்த ஜீப்பில் சென்று காவலர்களின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

சிறப்பாக பணியாற்றிய 48 காவலர்களுக்கு முதலமைச்சரின் நற்பணி பதக்கங்களும், பின்னர் கொரானா வைரஸ் தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சமூக நலத்துறை, நீர்வள ஆதாரத்துறை துறை, வருவாய் துறை சுகாதாரத் துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட உள்ளிட்ட 28 பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கொரானா பரவலைத் தடுக்கும் விதமாக அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக வெளியை பின்பற்றியும் பெற்று பங்கேற்றனர்.

Tags:    

Similar News