300 பெண்களை காதல் வலையில் சிக்க வைத்த காமக்கொடூரன், அசந்துபோன அதிகாரிகள்

300 பெண்களை காதல் வலையில் சிக்க வைத்த, காமக் கொடூரனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இப்படியுமா இருக்கும் என்று அதிர்ச்சியடைந்தனர்.;

Update: 2021-08-04 06:01 GMT
300 பெண்களை சீரழித்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்ட காமக்கொடூரன்.

பார்க்கிற படத்துலயும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி பெண்கள் எப்படிதான் அயோக்கியர்களிடம் வரிசையாக மாட்டிக் கொள்கின்றனர். என சினிமாக்களில் வசனம் வரும்,

அது உண்மை போல 300 பெண்களிடம் பழகி அவர்களின், அரை நிர்வாணம், நிர்வாண படங்களை பெற்று, அதனை வைத்தே அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான் ஒரு ஆசாமி,

திருமணமாகாத, திருமணமான, மூத்த வயது பெண்மணி, சிறுமி என வயது வித்தியாசம் இல்லாமல் இந்த காமக் கொடூரனிடம் சிக்கியுள்ளனர் பெண்கள்.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் புரோதட்டூர் சென்னுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னகுமார் என்கிற ராஜா (28). பொறியியல் படிப்பில் சேர்ந்த இவர் முதலாம் ஆண்டிலேயே கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.

இதையடுத்து வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடு பட்டுள்ளார். இதில் கிடைக்கும் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று விடுதலை ஆனார்.

இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி திருட்டு வழக்கில் பிரசன்னகுமாரை போலீசார் கைது செய்தனர். அப்போது, அவரி டம் நடத்திய விசாரனையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கடப்பா மாவட்டடிஎஸ்பி சுனில் கூறியதாவது:

பிரசன்ன குமார் பேஸ்புக், ஷேர்சாட், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இளம்பெண்களிடம் நட்பை ஏற்படுத்தி பழகி வந்துள்ளான்.

பின்னர், காதல் வார்த்தைகளை நயமாக பேசி தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். நன்றாக பழக்கம் ஏற்பட்ட பிறகு அந்த பெண்களி டம் நிர்வாண, அரை நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் படி பிரசன்னகுமார் கேட்பானாம்.

அவனது, காதல் வலையில் வீழ்ந்த பெண்களும், காதலன் தானே என நினைத்து தங்களது நிர்வாண படங்களை அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து, பிரசன்னகுமார் இளம்பெண்கள் அனுப்பிய நிர்வாண படங்கள், வீடியோக்களை அவர்களிடமே காணபித்து நகை, பணம் கேட்பானாம்.

அவ்வாறு தரவில்லை என்றால் நிர்வாண படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளான். இதனால், பயந்துப்போன பெண்கள் அவன் கேட்ட நகை, பணத்தை கொடுத்துள்ளனர்.

மேலும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் அளிக்காததால் இதை சாதகமாக பயன்ப டுத்தி கொண்டு தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளான்.

அதன்படி கடப்பா, விஜயவாடா, ஐதராபாத் உட்படபல்வேறு நகரங் களில் உள்ள 300க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் மற்றும் திருமணம் ஆன நடுத்தர வயது பெண்கள், பிர சன்னகுமாரின் காதல் வலையில் சிக்கி சீரழிந்துள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் போலீசார் பிரசன்னகு மாரின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, போலீசாரே அதிர்ச்சி அடையும் வகையில் ஏரா ளமான இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிர்வாண படங்கள் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து, செல்போனை பறிமுதல் செய்த னர். மேலும், பிரசன்னகுமாரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News