முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமான மாநகராட்சி உதவி ஆணையர் பணிமாற்றம்

முறையாக விசாரணை செய்தால் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது வெளியாகும் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

Update: 2021-07-23 09:30 GMT

திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளராகப் பணியாற்றி வந்தவர் பிரேம் ஆனந்த். இவர் கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளராகப் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஜஹாங்கிர் பாட்சா புதிய உதவி ஆணையாளராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோபிச்செட்டிபாளையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்ட உதவி ஆணையர் முன்னாள் உள்ளாட்சி அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானர் என்பது ஊரறிந்த ரகசியம். இவர் விக்கிரமசிங்கபுரம், தென்காசி நகராட்சியில்ஆணையராக இருந்துள்ளார். ஏற்கனவே இப்பகுதியில் ஆணையராக இருந்த பவுன்ராஜ் வால்பாறை நகராட்சி ஆணையராக இருந்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுபோன்று மாற்றம் செய்யப்பட்ட உதவி ஆணையர் பணிபுரிந்த நகராட்சிகளில் முறையாக விசாரணை செய்தால் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது வெளியாகும் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

Tags:    

Similar News