வந்தவாசி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

வந்தவாசி அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-20 11:51 GMT

குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வந்தவாசியை அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தில் சத்யாநகர் பகுதி உள்ளது. அங்கு ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்தநிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்து வந்தவாசி-திண்டிவனம் சாலையில்  காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தங்கள் பகுதிக்கு சீராகக் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரும், ஊராட்சி மன்ற தலைவரும், தங்களுக்கு சீராகக் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால், சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். சாலை மறியலால் வந்தவாசி-திண்டிவனம் சாலையில்  காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News