வேட்டவலம்: சூடம் ஏற்றிய போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பகுதியில், கற்பூரம் ஏற்றிய போது சேலையில் தீப்பிடித்து, மூதாட்டி பலியானார்.

Update: 2021-09-13 07:00 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வசந்தா (62). இவர்,  வீட்டு பூஜை அறையில் சூடம் ஏற்றி வழிபாடு நடத்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராத வகையில் அவரது சேலையில் தீப்பிடித்து, மளமளவென உடல் முழுவதும் தீ பரவியது . 

இதனால், வசந்தா அலறி துடித்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும், இந்த சம்பவத்தில் அவர் பலத்த தீக்காயம் அடைந்தார். அவரை, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வசந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து, வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News