விளைபொருட்களுக்கு சுங்கவரி வசூலிப்பதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்லும் விளைபொருட்களுக்கு சுங்கவரி வசூலிப்பதை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

Update: 2022-08-06 14:18 GMT

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்வுகூட்டம் நடைபெற்றது. ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்பிரிவு) கே.குமரன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பன்னீர்செல்வம், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் அமுல்பிரகாஷ் சேவியர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வேளாண் உதவி இயக்குனர் சந்திரன் வரவேற்றார்.

கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள் சதாசிவம், பழனிச்சாமி, அட்மா ஆலோசனை குழு தலைவர் சிவக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். அப்போது விவசாயிகள் கூறியதாவது:கூட்டு பட்டாவிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும், 100 நாள் வேலை தடை இல்லாமல் வழங்க வேண்டும், கால்நடைத்துறை மூலம் தடையின்றி வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனபயிர் வளர்ப்பதற்கு கடன் வழங்கப்படுகிறது விவசாயிகள் சென்று கேட்டால் எவ்விதபதிலும் சொல்வதில்லை,

ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்லப்படும் விளை பொருட்களுக்கு சுங்கவரி வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் கடன்பெறும் விவசாயிகளுக்கு உரங்களை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். வேளாண் துறை மூலம் கூட்டுறவு வங்கிகளுக்கு அதிகமாக உரம் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டு விவசாயிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். முடிவில் வேளாண் துணை அலுவலர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News