கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் நாளை (14.06.2022) மின் விநியோகம் நிறுத்தம்

Update: 2022-06-13 13:59 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் மின்வாரிய கோட்ட பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் வினியோகம் நிறுத்தும் பகுதிகள் கீழ்பெண்ணாத்தூர், ஆண்டலூர், கரிக்கலாம்பாடி, ராயப்பேட்டை சிறுவத்தூர் வேடநத்தம் வழுதலங்குணம் கத்தாழம்பட்டு சோமாசிபாடி கடம்பை, கழிக்குளம், நல்லான்பிள்ளை பெற்றாள், ஆரஞ்சி, காட்டு வேளானந்தல், ஆண்டலூர், மானாவரம், மேட்டுப்பாளையம், ஆகிய கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News