வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்: காவல் ஆய்வாளர் அறிவிப்பு

கீழ்பெண்ணாத்தூர் பகுதியை சேர்ந்த வணிகர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் காவல் ஆய்வாளர் அறிவுறுத்தல்.

Update: 2021-08-18 06:01 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியை சேர்ந்த வணிகர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் காவல் ஆய்வாளர் அறிவுறுத்தினார்

கீழ்பெண்ணாத்தூர் காவல்நிலையத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் கொரோனா நோய் தொற்று குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இதில் காவல் ஆய்வாளர் ஷியாமளா பேசுகையில் கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் கொரோனா தொற்றைத் தவிர்க்க வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து வருவதை வியாபாரிகள் கண்காணிக்க வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். 

கடை ஊழியர்கள் வியாபாரிகள் கண்டிப்பாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும். அவ்வாறு தவறும்பட்சத்தில் ஆய்வுக்கு வரும் போது கண்டிப்பாக கடை உரிமையாளரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News