செங்கம், கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

செங்கம், கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2023-05-27 01:49 GMT

கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

செங்கம், கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா, நெகிழி பைகள் பயன்படுத்தப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

கீழ்பெண்ணாத்தூரில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள், புகையிலை பொருட்கள் டீ கப்புகள் பயன்படுத்தப்படுகிறதா என உதவி ஆய்வாளர், வட்டார ஆரம்ப சுகாதார மேற்பார்வையாளர் சதீஷ் பாபு தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் உதவி ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளா், தூய்மைப் பணியாளா்கள் நகரில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்

திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் சாலையில் உள்ள பேருந்து நிலையம் தாலுக்கா அலுவலகம் , பதிவுத்துறை அலுவலகம் கடைவீதிகள் உணவகம் மளிகை கடை உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது மேலும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது தொடர்ந்து நெகிழி பயன்பாடுகள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பயன்பாடுகள் குறித்து கண்காணிக்கப்படும் என சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் எச்சரித்தார்.

செங்கம்

செங்கம் பேரூராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட பகுதியில் வணிகா்கள், பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள், டீ கப்புகளை பயன்படுத்தி வருவதாக வந்த புகாரின் பேரில், பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளா் சொக்கநாதன் தலைமையில் துப்புரவு ஆய்வாளா், தூய்மைப் பணியாளா்கள் நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்த கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் துக்காப்பேட்டை, புதிய பேருந்து நிலையம், பெங்களூரு சாலை, பழைய பேருந்து நிலையம், கடைவீதி, இராஜ வீதி ஆகிய இடங்களில் மளிகைக் கடை, உணவகம், காய், கனி கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு சுமாா் 170 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடை உரிமையாளா்கள் ரூ.8 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து, நெகிழிப் பயன்பாடுகள் குறித்து கண்காணிக்கப்பட்டு பயன்படுத்தும் கடை உரிமையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலா் எச்சரித்தாா்.

Tags:    

Similar News