கீழ்பென்னாத்தூரில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச உழவு பணி

கீழ்பென்னாத்தூர் வேடநத்தம் கிராமத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச உழவு பணியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி. துவக்கி வைத்தார்

Update: 2021-06-12 06:59 GMT

கீழ்பென்னாத்தூர் வேடநத்தம் கிராமத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச உழவு பணியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி. துவக்கி வைத்தார்

கொரோனா காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதால் விவசாய தொழில் பாதிக்கப்பட்டது. விவசாய பணிக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. மேலும், நிலத்தை உழுவதற்கும் ஆட்கள் கிடைக்கவில்லை. 

இந்நிலையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை & TAFE டிராக்டர் நிறுவனம் இணைத்து சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச உழவு பணியினை அறிவித்திருந்தது,

அந்த திட்டத்தை கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி வேடநத்தம் கிராமத்தில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் திரு.கு.பிச்சாண்டி.  துவக்கிவைத்தார்.

உடன் வேளாண்மைத்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News