கீழ்பெண்ணாத்தூரில் இலங்கை தமிழர்களுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கல்

கீழ்பெண்ணாத்தூரில், இலங்கை தமிழர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை, சட்டப்பேரவை துணைத்தலைவர் வழங்கினார்.;

Update: 2021-12-13 13:52 GMT

காரியந்தல் கொண்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை, சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம்,  காரியந்தல் கொண்டம் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்குள்ள இலங்கை தமிழர்களுக்கு,   அரசு நலத்திட்ட உதவிகளை  தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர்,  கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், துரிஞ்சாபுரம் ஒன்றிய தலைவர் அண்ணாமலை, மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்,  ஒன்றிய கவுன்சிலர்கள்,  அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News