அனுக்குமலை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த அனுக்குமலை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

Update: 2021-08-16 16:30 GMT

நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அனுக்குமலை ஊராட்சியில் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். 

இந்நிகழ்வில் கீழ்பெண்ணாத்தூர் தாசில்தார் வைதேகி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சம்பத், பிடிஓ பழனி மற்றும் அரசு அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News