தண்டராம்பட்டு அருகே ஜவுளிக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தண்டராம்பட்டு அருகே, கடன் தொல்லையால் ஜவுளிக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-21 07:00 GMT

கடன் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அப்துல் சுக்கூர்

திருவண்ணாமலை மாவட்டம்,  தண்டராம்பட்டு தாலுகா,  தானிப்பாடி அருகே உள்ள திருவடத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்சுக்கூர் (வயது 55). ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஷீபா (22), மருவா (20) என 2 மகள்களும், அர்பாத் (17) என்ற மகனும் உள்ளனர். அப்துல்சுக்கூர் வியாபாரத்திற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாக தெரிகிறது. தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அப்துல்சுக்கூர், நேற்று இரவு கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தானிப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று,  உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News