குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை அமைச்சர் வேலு வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு கிராமத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை அமைச்சர் வேலு வழங்கினார்

Update: 2022-01-04 15:27 GMT

குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ வ.வேலு வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு கிராமத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ வ.வேலு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி,  மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ்,  செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் , செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர்  அம்பேத் குமார்,  கூடுதல் ஆட்சியர் பிரதாப் , கூட்டுறவு சங்கங்களின் திருவண்ணாமலை மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் மற்றும் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News