செங்கம் அருகே தண்ணீரில் மூழ்கி சிறுவன்-சிறுமி உயிரிழப்பு

செங்கம் அருகே குளிக்க சென்ற சிறுவன்-சிறுமி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2022-05-15 01:58 GMT

தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த விஷ்ணு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பரமனந்தல் தீபம் நகரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் கீர்த்தனா (வயது 11) மற்றும் அவர்களது உறவினரான புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடைய மகன் விஷ்ணு (11) ஆகியோர் வீட்டின் அருகே உள்ள செய்யாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

இதனையடுத்து 2 பேரும் ஆற்றில் இறங்கி குளிக்கும் போது ஆழம் அதிகம் உள்ள பகுதியில் சிக்கிக் கொண்ட இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News