கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

மாநில அளவில் நடந்த கராத்தே சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற செங்கம் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2021-11-22 03:00 GMT

வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அண்மையில், அறந்தாங்கியில் தேசிய அளவில் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. கராத்தே பயிற்சி அகாடமி மூலம், திருவண்ணாமலை மாவட்டம்,  செங்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த  கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற 25 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி, கலந்து கொண்டு  பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் கராத்தே பயிற்சியாளர், பள்ளி தலைமையாசிரியர்,  பெற்றோர்கள்,  மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News