இலங்கை மக்களுக்கு 4 ஆயிரம் மெட்ரிக் டன் ஆவின் பால் பவுடர்: அமைச்சர் நாசர்

ஆவின் பால் பவுடா் தொழில்சாலையில் தமிழக பால் வளத்துறை அமைச்சா் நாசா் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2022-05-15 07:19 GMT

இலங்கை மக்களுக்காக ஆவின் நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட உள்ள 500 மெட்ரிக் டன் பால் பவுடர் தயாரிப்பு பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில் இயங்கும் ஆவின் பால் பவுடா் தொழில்சாலையில் தமிழக பால் வளத்துறை அமைச்சா் நாசா்  ஆய்வு மேற்கொண்டாா்.

அம்மாபாளையம் ஆவின் தொழில்சாலையில் இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக பால் பவுடா் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை பால் வளத்துறை அமைச்சா் சா.மு. நாசா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: அம்மாபாளையம் ஆவின் பால் பவுடா் தயாரிப்பு நிறுவனம் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டா் பாலை கையாளும் திறன் கொண்டது. இங்கு நாள் ஒன்றுக்கு 20 மெட்ரிக் டன் பால் பவுடா், 10 மெட்ரிக் டன் வெண்ணெய், 5 மெட்ரிக் டன் நெய் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, தமிழக முதல்வரின் ஆணையின் பேரில், இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக, 500 மெட்ரிக் டன் பால் பவுடா் திருவண்ணாமலை மாவட்டம், அம்மாபாளையம், சேலம், ஈரோடு பகுதிகளில் உள்ள ஆவின் தொழில்சாலைகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பால் பவுடா் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றாா் அமைச்சா் நாசா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், சி.என். அண்ணாதுரை எம்.பி., மருத்துவா் எ.வ.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ. கிரி,  பெ.சு.தி.சரவணன், புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News