சேத்துப்பட்டு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அதிகாரிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்

Update: 2021-07-14 07:21 GMT

சேத்துப்பட்டு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அதிகாரிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் வீடு வீடாக சென்று கொரோனா விழிப்புணர்வு மக்களிடம் எந்த நிலையில் உள்ளது என்பதை சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்தனர்.

இதில் சுகாதாரத்துறை மருத்துவர்கள் செவிலியர்கள் வட்டார மருத்துவ அலுவலர்கள் வீடு வீடாக சென்று குடும்பத்திலுள்ளவர்களிடம் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டீர்களா என்ற கேள்விகளை எழுப்பி, தடுப்பூசிக்கு பிறகு உடல் நிலையில் மாற்றம் ஏதாவது உள்ளதா எனக் கேட்டறிந்து விவரங்களை சேகரித்தனர். தடுப்பூசி போட்ட அவர்களின் உடல் நிலை எவ்வாறு உள்ளது சளி, இருமல் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News