ஆரணி: ரயிலில் இருந்து இறங்க முயன்ற கல்லூரி மாணவர் பலியான பரிதாபம்

ஆரணி அருகே, ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.

Update: 2022-04-21 00:51 GMT

கோப்பு படம் 

ஆரணியை அடுத்த களம்பூர் ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், கடப்பா கல் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் தேன்ராஜ் (வயது 22), வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் திருப்பதியில் இருந்து விழுப்புரம் செல்லும் ரயிலில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

மாலை 6.20 மணிக்கு ஆரணி ரோடு ரயில் நிலைய இடதுபுற பிளாட்பாரத்திற்கு ரெயில் வந்தது. ஆனால் தேன்ராஜ் இடதுபுற பிளாட்பாரத்தில் இறங்குவதற்கு பதிலாக ரயிலின் மறுபக்க வாயில் வழியாக கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News