ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

ஆரணி இரும்பேடு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச் சத்து பொருட்கள் வழங்கப்பட்டது

Update: 2021-10-03 06:32 GMT

சிறப்பு மருத்துவ முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச் சத்து பொருட்கள் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி இரும்பேடு கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி துவக்கி வைத்தார். சுமார் 2,300 பொதுமக்கள் பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு பயன் பெற்றனர். கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின்  ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வட்டார மருத்துவர்கள்,  செவிலியர்கள் ,  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News