விபத்தில்லா தீபாவளி பருவ மழையை எதிர்கொள்வது குறித்த கருத்தரங்கு

ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி, மழைக்காலத்தை எதிர்கொள்வது குறித்து கருத்தரங்கம் நடந்தது

Update: 2021-10-29 23:15 GMT

விபத்தில்லா தீபாவளி, மழைக்காலத்தை எதிர்கொள்வது குறித்து கருத்தரங்கம் ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆரணி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் சார்பில் தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும், எதிர்வரும் மழை காலத்தினை எதிர்கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது. தீயணைப்பு துறை வீரர்கள் விபத்தில்லா தீபாவளி எவ்வாறு கொண்டாடுவது எனவும் மழைக்காலத்தை எவ்வாறு எதிர்கொள்வது எனவும் மாணவர்களுக்கு செய்து காட்டினார். இது குறித்து தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பெற்றோர் - ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News