சாலையில் நாற்று நட்டு பெண்கள் நுாதன போராட்டம்

ஆரணி அருகே கனமழையால் சேரும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு நுாதனப் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-07-21 07:24 GMT

சேரும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் குதித்த பெண்கள்.

ஆரணி அருகே கடந்த வாரம் பெய்ந்த கனமழையால் சேரும் சகதியுமான சாலையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சியை கண்டித்து திடிரென நாற்று நட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள இரும்பேடு ஊராட்சிக்குபட்ட ரோடு தெரு ராஜீவ்காந்தி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 3ஆண்டுக்கும் மேலாக சாலை வசதியின்றி மக்கள் தவித்து வந்தனர்.இதனால் இரும்பேடு ஊராட்சி மன்றத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், கடந்த வாரம் ஆரணி பகுதியில் பெய்த கனமழையால், ரோடு தெருவில் ஆங்காங்கே மழை நீருடன் கால்வாய் நீரும் தேங்கி சேரும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இரும்பேடு ஊராட்சியை கண்டித்து திடிரென சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், ஆரணி இரும்பேடு சாலையில் 50க்கும் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. அதிகாரிகள் யாரும் வராததால் மனுவாக எழுதி ஊராட்சி அலுவலகத்தில் அளித்து விட்டு பொதுமக்கள் தானாக முன்வந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News