ஆரணியில் திருடு போன தங்க நகைகள் மீட்பு

ஆரணியில் கடந்த ஆண்டு திருடு போன தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.

Update: 2024-06-12 02:11 GMT

நகைகளை மீட்ட போலீசார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் விஏகே நகர் பகுதியில் கேபிகே நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். அதிமுக பிரமுகரான இவர் ஆரணியில் இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்து வருகிறார்.

ஆனந்தன் தனது குடும்பத்துடன் சென்னையில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு, கடந்த பிப்ரவரி மாதம் 27 ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார்.

திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு ஆனந்தன் தனது குடும்பத்துடன் மறுநாள் காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்கம் கதவை பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூபாய் ஐந்து லட்சம் நோக்கம் 350 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து ஆரணி டவுன் காவல்துறையில் ஆனந்தம் புகார் கொடுத்திருந்தார் ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

அந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்வதில் இந்த திருட்டில் ஈடுபட்டவர் திருவண்ணாமலை மாவட்டம் தென்மாதிமங்கலம் கிராமத்தை ராமஜெயம் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆரணி டவுன் போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடிவந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமஜெயம் திருட்டு வழக்கில் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் கைது செய்யப்பட்டு, அங்குள்ள கிளைசிறையில் அடைக்கப்பட்டது, ஆரணி தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஆரணி டவுன் போலீசார் ராமஜெயத்தை நீதிமன்ற காவல் எடுத்து நேற்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆரணியில் ஆனந்தன் வீட்டில் திருடிய வகைகளில் 10 சவரன் மட்டும் தென்மாதி மங்கலத்தில் உள்ள தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக ராமஜெயம் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், ராமஜெயத்தை ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி மீண்டும் சிவகங்கை மாவட்டம் திப்புத்தூரில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

Similar News