ஆரணி அருகே பையூர் கிராம கடைகளில் போலீசார் திடீர் சோதனை

ஆரணி அருகே பையூரில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என கடைகளில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-26 10:32 GMT

கடைகளில் சோதனையில் ஈடுபட்ட போலீசார்.

ஆரணி அடுத்த பையூர் ஊராட்சியில் உள்ள பெட்டி கடைகளிலும் மளிகை கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகிறதா என ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ஆய்வு நடத்தினர்.

மேலும் ஒவ்வொரு கடைகளில் முன்பாகவும் அறிவிப்பு நோட்டீசுகளும் ஒட்டப்பட்டன, எங்கேனும் புகையிலை விற்கப்படுவது தெரிய வந்தால் உடனடியாக வாட்ஸாப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என அறிவிப்பு நோட்டீசுகளும் ஒட்டப்பட்டன.

Tags:    

Similar News