நான் முதல்வன் திட்ட பயிற்சிக்காக லண்டன் சென்ற ஆரணி மாணவி..!

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சிக்காக ஆரணி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்

Update: 2024-06-13 03:39 GMT

 மாணவி டி.ரிஷிகா

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக, லண்டன் துா்ஹாம் பல்கலைக்கழகத்துக்கு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசுப் பொறியியல் கல்லூரி மாணவி தோ்வாகி அழைத்துச் செல்லப்பட்டாா்.

தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி, வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, சிறப்பாக செயலாற்றியவா்களை தோ்ந்தெடுத்து வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

அந்த வகையில் தற்பொழுது லண்டனின் நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வார திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு பிரிட்டீஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய பயிற்சிகளுக்கு 15 பொறியியல் மற்றும் 10 அறிவியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அழைத்து செல்லப்படுகின்றனா்.

இதில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவி டி.ரிஷிகா தோ்வு செய்யப்பட்டாா்.

தோ்வு செய்யப்பட்ட 25 பேரில், மாணவி ரிஷிகா ஒருவா் என்பதால், ஆரணி அரசுப் பொறியியல் கல்லூரிக்கு கிடைத்த பெருமை என்று கல்லூரி முதல்வா் செந்தில்குமாா் மற்றும் பேராசிரியா்கள் தெரிவித்தனா். 

மேலும், மாணவி லண்டன் சென்று வர அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாணவி தெரிவிக்கையில்

நான் முதல்வன் திட்டத்தில் இணைந்து நிறைய பயிற்சிகள் பெற்றேன் .ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகள் எடுக்கப்பட்டன .10 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு முதல் 25 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

லண்டனிலுள்ள கல்லூரியில் சிறப்பு பயிற்சிக்காக செல்லவுள்ளோம். இது எங்கள் வாழ்விற்கு மிகுந்த பலனளிக்கும் என்றார்..

இவர்களுடன் இரு பேராசியர்களும் உடன் செல்கின்றனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட மாணவர்களை அவர்களின் குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News