ஆரணியில் வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஆரணியில், வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் , 4 நாட்கள் வங்கி மூடப்படும் என தெறிவித்துள்ளனர்.

Update: 2022-01-22 13:07 GMT

தச்சூர் சாலையில் இந்தியன் வங்கியில், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டம்,  ஆரணி அடுத்த தச்சூர் சாலையில்,  இந்தியன் வங்கி இயங்கி வருகின்றன. இதில் 13 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு உடல் நலம் பாதிக்கபட்டதால்,  எஸ்.வி. நகரம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில்,  பெண் ஊழியர் உட்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து வங்கியில் பணிபுரிந்த மற்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யபட்டன. மேலும் கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் தங்களின் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என்றும் 4 நாட்கள் வங்கி இயங்கக்கூடாது என்றும்,  மருத்துவத்துறையினர் அறிவுறுத்தினர். இதனால், வங்கிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News