பிரதமர் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கான ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

Update: 2022-07-24 06:55 GMT

பிரதமர் வீடு கட்டும் திட்ட  பயனாளிகளுக்கு ஆலோசனை  வழங்கப்பட்டது.

பயனாளிகளிடம் ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் கடந்த நிதியாண்டில் 23 பயனாளிகள் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட  ஆணை வழங்கியும், சிலர் வீடு கட்டும் பணிகளை தாமதமாக செய்து வருகின்றனர்.

இதையடுத்து பயனாளிகளுக்கு ஆலோசனை கூட்டம் கிராம சேவை மையத்தில் மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி தலைமையில் நடைபெற்றது. வண்ணாங்குளம் ஊராட்சி தலைவர் சங்கீதா விக்னேஷ், காட்டுக்கா நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பணி மேற்பார்வையாளர் சுஜாதா வரவேற்று பேசினார்.

இந்த முகாமில் கலந்து கொண்ட வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி ஆலோசனை வழங்கிப் பேசுகையில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி வரும் பயனாளிகள் விரைந்து முடித்தால் உடனடியாக பணம் வங்கி மூலம் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றார்.

இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் உள்பட பயனாளிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் தயாளன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News