நன்செய் நிலத்தை வேளாண் அல்லாத பணிகளுக்கு வகை மாற்றம்: மாவட்ட கலெக்டர் ஆய்வு

நன்செய் நிலத்தில் வேளாண்மை அல்லாத நோக்கத்திற்கு மாற்றம் செய்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Update: 2021-08-28 17:19 GMT

ஆரணி அருகே நன்செய் நிலத்தை வேளாண் அல்லாத பணிகளுக்கு வகை மாற்றம் செய்வது தொடர்பார ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் முகேஷ்.

நன்செய் நிலத்தை வேளாண்மை அல்லாத நோக்கத்திற்கு வகை மாற்றம் செய்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்  ஆய்வு மேற்கொண்டார். 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், அரையாளம் கிராமம்,  திருவண்ணாமலை வட்டம் சமுத்திரம் கிராமம், கலசப்பாக்கம் கடலடி ஆகிய கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், திருவண்ணாமலை வட்டம், சமுத்திரம் கிராமத்திலும்  ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது,  உதவி ஆட்சியர் கட்டா ரவி தேஜா, வருவாய் கோட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News