ஆரணி டவுன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா

ஆரணி டவுன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-12-19 13:56 GMT

ஆரணி டவுன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சங்கர் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக அவருக்கு சளி தொந்தரவு இருந்து வந்தது. அவர் ஆரணி அரசு மருத்துவமனையில் நேற்று கொரோனா சோதனை மேற்கொண்டார்.

அதன் முடிவு இன்று வெளியானது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரை உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

Tags:    

Similar News