ஆரணி அசைவ ஓட்டல்கள், இறைச்சி கடைகளில் சுகாதார ஆய்வாளர் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அசைவ ஓட்டல்கள், இறைச்சி கடைகளில் சுகாதார ஆய்வாளர் திடீர் ஆய்வு நடத்தினார்.

Update: 2022-07-13 11:57 GMT

ஆரணியில் உள்ள அசைவ ஓட்டல்களில்  சுகாதார ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வந்த புகாரின்பேரில் அசைவ ஓட்டல்கள் இறைச்சி கடைகளில் சுகாதார ஆய்வாளர் திடீர் சோதனை நடத்தினார்.

ஆரணி நகரில் சமீப காலமாக அசைவ ஓட்டல்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், கெட்டுப்போன உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர் பி. தமிழ்ச்செல்வி உத்தரவின்பேரில் களப்பணியாளர்களுடன் சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன்  இறைச்சியை தனியாக பிரித்தெடுக்கும் கடைகளிலும், அசைவ ஓட்டல்களிலும், இறைச்சி விற்பனை செய்யும் கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்கள் ஆய்வு மேற்கொண்டபின் ஓரிரு தினங்களில் மட்டும் குறைபாடில்லாமல் உணவு வழங்கப்படும் நிலையில் மீண்டும் தரமற்ற உணவே வழங்கப்படுவதாக வாடிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே தொடர்ந்து இறைச்சி கடைகள், ஓட்டல்களை கண்காணிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News