ஆரணி: உணவகங்களில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு

ஆரணியில் அசைவ ஓட்டலில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.;

Update: 2023-09-20 02:18 GMT

ஆரணியில் அசைவ ஓட்டலில், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சவர்மா கிரில் சிக்கன் சாப்பிட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். மேலும் 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உணவகங்களில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது,  குளிர்சாதன பெட்டிகள் உள்ளதா என. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆரணியில் அசைவ ஓட்டலில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். காலாவதியான இறைச்சி மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட காந்தி ரோடு மார்க்கெட் வீதி சத்தியமூர்த்தி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் மற்றும் இறைச்சிகள் தரம் அற்ற முறையில் உள்ளதாக நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.

மேலும் புகாரி அடிப்படையில் நகராட்சி ஆணையர் குமரன் தலைமையில் அசைவ உணவகங்களில் சோதனையில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து காந்தி சாலையில் உள்ள அசைவ உணவகத்தில். சோதனை மேற்கொண்ட போது குளிரூட்டும் பெட்டியில் காலாவதியான தரமற்ற இறைச்சி மற்றும் மசாலா பொருட்கள் வைத்திருப்பதை ஆய்வில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து இறைச்சி மற்றும் மசாலா பொருட்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அசைவ உணவகத்திற்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டனர். மற்றொரு உணவகத்தில் அங்கு சமைக்க பயன்படுத்தப்பட்ட பழைய கெட்டுப்போன கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட 10 கிலோ இறைச்சி மற்றும் பழைய எண்ணெயை பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட நெகிழி பைகளையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 உணவகங்களுக்கு ரூபாய் 13,000 அபராதம் விகித்தனர்.

ஆய்வின் போது, சுகாதார மேற்பாா்வையாளா்கள் பிரதாப், குமாா், அண்ணாமலை, பாபுஜி மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Similar News