2 ஆசிரியர், 22 மாணவிகளுக்கு கொரோனா தொற்று

ஆரணி அரசு பள்ளியில் 2 ஆசிரியர், 22 மாணவிக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2022-01-13 04:56 GMT

ஆரணி அரசு மேல்நிலைப்பள்ளி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1,200க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். ஒன்பது முதல், பிளஸ் 2 மாணவியருக்கு மட்டும் வகுப்பு நடந்து வருகிறது.

பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இரண்டு நாட்களுக்கு முன், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவியர் 200க்கும் மேற்பட்டோர், 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் முடிவு வெளியானதில், 22 மாணவியர், இரண்டு ஆசிரியருக்கு தொற்று இருப்பது தெரிந்தது. இதன் காரணமாக மூன்று நாட்களுக்கு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

Tags:    

Similar News