குடை, வளையல் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களில் 1330 திருக்குறளை எழுதி சாதனை

ஆரணி அருகே உள்ள அரசு பள்ளியின் தமிழ் ஆசிரியை, குடை, வளையல் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களில் 1330 திருக்குறளை எழுதி சாதனை படைத்துள்ளார்.;

Update: 2023-10-10 01:41 GMT

வீட்டு உபயோகப் பொருட்களில் திருக்குறளை எழுதி சாதனை படைத்த ஆசிரியை உமாராணி

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி, ஆரணி அருகே உள்ள அரசு பள்ளியின் தமிழ் ஆசிரியை ஒருவர், குடை, வளையல் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களில் 1330 திருக்குறளை எழுதி சாதனை படைத்துள்ளார்.

அவரை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அழைத்து பாராட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒருங்கிணைந்த வி.ஏ.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் உமாராணி இவர் எஸ்.வி.நகரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர், தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா விடுமுறையில் சிறு சிறு சாதனை முயற்சிகளை மேற்கொண்டார்.

உலகமே வீட்டில் முடங்கிக் கிடந்த போது, இந்த நேரத்தைத் தமிழ் மொழி வளர்ச்சிக்குச் செலவிட முடிவு செய்துள்ளார். இதனால், ஓய்வு நேரத்திலிருந்த போது தமிழ்மொழியில் கவிதைகள் மற்றும் நூல்கள் எழுத தொடங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்மொழியின் புது முயற்சியாக, திருக்குறளைத் தேசிய நூலக அறிவிக்கக் கோரி, சோயாபீன்ஸ் அகல்விளக்கு கை வளையல், கழுத்தில் அணியும் மணி, ரூபாய் நாணயம் மற்றும் குடைகளில் தேசிய கொடி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களில் 1330 திருக்குறளை எழுதி சாதனை படைத்துள்ளார்.

இதனை 'ஆல் இண்டியா புக்ஸ் ஆப் ரெக்கார்டு' (ALL INDIA BOOKS OF RECORD)  மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது, நல்லாசிரியர் விருது உள்ளிட்ட, இதுவரையில் 70 க்கும் மேற்பட்ட விருதுகளைத் தமிழ் ஆசிரியை உமாராணி பெற்றுள்ளார்.

முத்தமிழ் அறிஞர் சங்கம், ஆரணி லயன்ஸ் சங்கம், சில்க் சிட்டி லயன்ஸ் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மூலமாக ஆசிரியை உமாராணி சாதனை விருதுகள் பெற்றுள்ளார்.

மேலும் தமிழ்ப் பற்றால் பல சாதனைகளைப் புரிந்த தமிழ் ஆசிரியை உமாராணியைக் கண்டு பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் நேரில் அழைத்து, அவரை கௌரவித்து பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆசிரியை உமாராணி கூறுகையில், ''திருக்குறளை தேசிய நூலாக அரசு அறிவிக்க வேண்டும், வாழ்க்கையின் அனைத்து நெறிமுறைகளும் திருக்குறளில் அடங்கியுள்ள அடங்கியுள்ளது. அதனை பின்பற்றினாலே மனிதன் நல்ல மனிதனாக வாழ முடியும். எனது சாதனைப் பயணம் தொடரும்'' என்றார்.

மேலும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளும் தமிழ்மொழி வளர்ச்சியில் சாதனை புரிய வேண்டும் என்பதற்காக, அவர்களை ஊக்குவிப்பதோடு, சிறப்பு முயற்சிகளையும் எடுத்து வருகிறேன் தமிழ் ஆசிரியை உமாராணி. என கூறினார்.

Tags:    

Similar News