லாரி மோதி தொழிலாளி சாவு - ஆரணியில் சோகம்

ஆரணி அருகே, லாரி மோதி தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2022-03-14 12:45 GMT

ஆரணி கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது 55), சுவரொட்டிகள் ஒட்டும் தொழிலாளி. சுவரொட்டிகளை ஒட்டும் பணிக்கு சைக்கிள் ஒன்றை பயன்படுத்தி வந்தார். ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கும்போது, சைக்கிள் பழுதடைந்தது. சைக்கிளை பழுது நீக்க அங்குள்ள ஒரு கடை ஓரம் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி திடீரென பிச்சாண்டி மீது மோதியது. அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து ஆரணி டவுன் போலீசில்,  பிச்சாண்டியின் மனைவி நிர்மலா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்.

Tags:    

Similar News