ஆரணி டூவிலர் விபத்து: காயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆரணி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதலில் படுகாயம் அடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-12-24 13:00 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிைய அடுத்த விண்ணமங்கலம் அருகே கடந்த 22-ந்தேதி இரவு 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில்,  ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவரும் வாத்து மேய்க்கும் தொழிலாளியின் மகனுமான அற்புதராஜ் (வயது 19) என்பவரும், மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த நெசல் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (28) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,  சிகிச்சை பலனின்றி நேற்று அற்புதராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல் கார்த்திக் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து,  ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News