மழை பெய்தால் அரசு மருத்துவமனையை சூழும் வெள்ளம்
மழை பெய்யும்போது, உடுமலை அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழ்வதால், நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள்.;
உடுமலை அரசு மருத்துவமனையை சூழ்ந்துள்ள வெள்ளம்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அரசு மருத்துவமனைக்கு தினசரி ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். மழைநீர் வழிந்தோடி செல்ல உரிய கட்டமைப்பு இல்லாததால், மழையின் போது மருத்துவமனை வளாகம் முழுக்க மழைநீர் சூழ்ந்து கொள்கிறது.
இதனால், நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே, மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.