தளியில் புகையிலை விற்றவர் கைது

தளி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

Update: 2021-06-24 11:05 GMT

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி அருகே தேவனூர்புதுரை சேர்ந்தவர் ரமேஷ்குமார்.45. மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து, விற்பனை செய்வதாக தளி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்அடிப்படையில் தளி போலீஸார் அங்கு சென்று சோதனை செய்தபோது 30 கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்து, ரமேஷ்குமாரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News