பட்டா கேட்டு முதல்வருக்கு மனு அனுப்பிய ஆத்துக்கிணத்துப்படி மக்கள்

உடுமலை ஆத்துகிணத்துப்பட்டி மக்கள், பட்டா கேட்டு தபால் நிலையத்திலிருந்து முதல்வருக்கு மனு அனுப்பினர்

Update: 2022-02-02 14:30 GMT

 திருப்பூர் அருகே பட்டா கேட்டு முதல்வருக்கு தபால் மூலம் மனு அனுப்பிய கிராம மக்கள்

உடுமலை ஆத்துகிணத்துப்பட்டி மக்கள், பட்டா கேட்டு, முதல்வருக்கு மனு அனுப்பினர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள ஆத்துகிணத்துப்பட்டி மக்கள், கச்சேரி வீதியில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து முதல்வருக்கு மனு வழங்கினர். அதில், இப்பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கூட்டு குடும்பமாக வாழ்வதால், வீடுகள் போதுமானதாக இல்லை. கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம். ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ள எங்களுக்கு அரசு நிலத்தில் பட்டா வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

Similar News