விதிமீறிய ஆம்னிபஸ்: அபராதம் விதித்த அதிகாரிகள்

விதிமீறி இயக்கப்பட்ட ஆம்னிபஸ் உரிமையாளர்களுக்கு, அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

Update: 2021-11-02 09:30 GMT

விதி மீறி இயக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பேருந்து.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. உடுமலையில் ஆம்னி பேருந்துகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விதிமுறை மீறி அதிக கட்டணம் வசூலித்த, 5 ஆம்னி பேருந்துகளுக்கு 12,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. அபராத தொகை செலுத்தாத ஒரு ஆம்னி பேருந்து, அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. 'தீபாவளி பண்டிகை வரை தினமும் வாகன தணிக்கை தொடரும்' என மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வ தீபா கூறினார்.

Tags:    

Similar News