மழை தீவிரம்: கட்டுப்பாட்டு அறை திறப்பு

உடுமலையில் தொடர் மழை பெய்து வருவதால், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-16 16:00 GMT

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பருவமழை பாதிப்புகளை சமாளிக்க, தாலுகா தோறும், பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், உடனுக்குடன் தகவல் தெரிவிக்க, உடுமலை தாலுகா அலுவலகத்தில், 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 'பாதிப்பு குறித்து, 04252 223 857 என்ற எண்ணில் மக்கள் எந்நேரமும் தகவல் தெரிவிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News