உடுமலை அரசு மருத்துவமனை ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று

உடுமலை அரசு மருத்துவமனை ஊழியர்கள் 10 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2022-01-18 12:00 GMT

கோப்பு படம் 

திருப்பூர் மாவட்டம், உடுமலையில், கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடுமலை அரசு மருத்துவமனையில், தற்போது, 6 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில், 40 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு டாக்டர், செவிலிய கண்காணிப்பாளர் மற்றும், 8 செவிலியர்கள் உட்பட, 10 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் வீட்டுத்தனிமை மற்றும் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரம் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமெடுத்துள்ளது. ஒரே நாளில், 150க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Tags:    

Similar News