கனமழையால் அணை பகுதிகளில் நீர்மட்டம் உயர்வு

Thirumoorthy Dam- திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி அணை, அமராவதி அணை பகுதிகளில் தொடர் கனமழையால், நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

Update: 2022-07-29 06:54 GMT

திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி அணை பகுதிகளில் தொடர் கனமழையால், நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

Thirumoorthy Dam- இந்த அணை பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருமூர்த்தி அணை பகுதியில், 48மி.மீ., அமராவதி அணை பகுதியில் 38 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

அமராவதி அணையின் நீர்மட்டம், 8862 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,385 கன அடி தண்ணீர் வரும் நிலையில், 1,292கன அடி தண்ணீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 28.69அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு,      46  கன அடி தண்ணீர் வருகிறது. 27 கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேறுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News