உடுமலையில் நாளை சான்று வழங்கும் முகாம்: விவசாயிகளுக்கு வாய்ப்பு

உடுமலையில், நாளை (29ம் தேதி) சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று வழங்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.

Update: 2021-10-28 13:45 GMT

பைல் படம்.

மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும், நுண்ணீர்பாசன மானியம் பெற, சிறு, குறு விவசாயி சான்று பெறுவது அவசியம். இச்சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம், உடுமலையில் நாளை நடத்தப்பட உள்ளது. காலை, 10:00 மணியளவில், குடிமங்கலம் ஒன்றியம், பெரியப்பட்டியிலும், மதியம், 2:00 மணியளவில், மூங்கில்தொழுவு கிராமத்திலும், சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் முகாம் நடத்தப்படும். மேலும், விபரம் தேவைப்படுவோர், தோட்டக்கலை அலுவலர், 8883610449 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம் என வட்டார தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News