கரையை ஆக்கிரமித்த முட்புதர் அகற்றும் பணி தீவிரம்

திருமூர்த்தி அணையில், கரைகளில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Update: 2021-11-23 15:45 GMT

திருமூர்த்தி அணை பகுதியில் உள்ள புதர்களை அகற்றும் பணி நடந்தது.

திருமூர்த்தி அணையில், கரைகளில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுபணித்துறையினர் சார்பில், திருமூர்த்தி அணை கரைகளில் அடர்ந்து வளர்ந்துள்ள, செடி, கொடிகளை அகற்றும் பணி துவங்கியுள்ளது.

திருமூர்த்தி நகர் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல் காண்டூர் கால்வாய் வரையுள்ள, சுமார் 4 கி.மீ., தொலைவிற்கு, அணையின் கரைகளில் வளர்ந்துள்ள கருவேல முட்கள், புதர்கள் மற்றும் செடி, கொடிகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், தண்ணீர் தடையின்றி வழிந்தோடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News