தொடர் மழை எதிரொலி: நிரம்புகிறது அமராவதி அணை

தொடர் மழை காரணமாக, அமராவதி அணை, நிரம்பும் நிலையை எட்டியுள்ளது.

Update: 2021-12-17 14:30 GMT

அமராவதி அணையின் எழில்மிகு தோற்றம்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணையின் பிரதான நீர்பிடிப்பு பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்து வருகிறது. தற்போது, வினாடிக்கு, 953 கன அடியாக உள்ளது.

அமராவதி அணையின் மொத்த கொள்ளளவான, 90 அடியில் தற்போது, 89 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கால்வாயம் மற்றும் ஆற்றின் வழியாக வெளியேறுகிறது.

Tags:    

Similar News