உடுமலை : பிரபல துணிக்கடையில் திடீர் தீ விபத்து

Update: 2021-01-07 04:45 GMT

உடுமலைபேட்டையிலுள்ள பிரபல துணிக்கடையில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருகோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை சீனிவாசா வீதியில் துணிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காலை 8 மணிக்கு கடையை திறக்க வந்த ஊழியர்கள், துணிக்கடையின் முதல் மற்றும் இரண்டாவது மாடியில் இருந்து புகை வருவதை கவனித்து, உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர்.தொடர்ந்து துணிகளில் ஏற்பட்ட தீயை உலர வைக்கும் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த தீ விபத்தில் சுமார் ஒரு கோடி  மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது.அதிகாலை நேரம் பொதுமக்கள் இல்லாததாலும், துணிக்கடையில் பணியாளர்கள் யாரும் இல்லாததாலும் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

Similar News